world

img

2023-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜோன் ஃபொஸ்ஸே-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவம், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறையில் நோபல் பரிசுகள் கடந்த 3 நாட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொல்ல முடியாதவற்றுக்கும் குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைக்காக நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜோன் ஃபொஸ்ஸே-க்கு நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது.